Penbugs
Coronavirus

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா தொடர்பான ஆய்வினை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க வேண்டுமென்பதால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கு மே3 ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைப்பேசியில் அழைப்பு விடுத்தால் காலர்ட்யூனாக கொரோனா விழிப்புணர்வு வாசகம் ஒலித்தல், பிரத்யேக செயலிகள் மூலம் கொரோனா பற்றி அறிதல் மற்றும் தடுத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் மத்திய அரசு இயங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது 1921 என்ற அழைப்பை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா அறிகுறி, பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வினை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து செல்போன்களுக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வேறு எண்ணில் இருந்து யாரேனும் பொழுதுபோக்கிற்காகவோ வேறு திட்டங்களுடனோ உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் கவனமாக இருந்து அது போன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதே வேளையில் அரசின் தொலைபேசி எண்ணான 1921ல் இருந்து அழைப்பு வந்தால், நலனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டுமென்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy