Penbugs
Coronavirus

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் அருகில் உள்ளார்களா என்பதை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலி கடந்த மாதம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் செயலி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியானது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை ஆரோக்கிய சேது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.