Penbugs
Editorial NewsEditorial News

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Penbugs

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Penbugs

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Penbugs

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றம்

Kesavan Madumathy

நாடு முழுவதும் செப்-ல் கல்வியாண்டு : யூ.ஜி.சி. பரிந்துரை!

Penbugs

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

Penbugs

ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்

Penbugs

TN plans ordinance for 10% reservation for Govt. school students in NEET

Penbugs

TN Governor gives his assent to 7.5% NEET Quota Bill

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Let us all unite against NEET: Suriya

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

Leave a Comment