தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பான பணிக்காக வழங்கப்படும் மதிப்பூதியம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறப்பான பணிக்காக பதவியின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு அரசு அதிகாரிகள் கமிட்டி, கழகம், நிபுணர் குழு மற்றும் ஆணையங்களில் அவர்கள் வழக்கமான பணிகளை தாண்டி தலைவர் மற்றும் உறுப்பினராக பணியாற்றி வருகின்றனர். இதற்காக தனியான மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை கருத்தில் கொண்டு செலவின குறைப்பு அடிப்படையில், இவர்ளுக்கான மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.