பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இது குறித்து அமிர் கானின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமிர் கான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரும் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் அக்கறைக்கும் நன்றி எனக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.