தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தேவைப்பட்டால் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.