Penbugs
CoronavirusEditorial News

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

நாடுமுழுவதும் இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

➤ காய்ச்சல் உட்பட கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ எல்லா கடைகளிலும் கிருமி நாசினியை வைத்திருக்க வேண்டுமெனவும் அப்படி இல்லாத கடைகள் அனுமதிக்கப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

➤ பொருட்களை வாங்கிய பிறகு கடையை விட்டு செல்லுமுன் வாடிக்கையாளர்கள் தங்களுடயை கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

➤ கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ கடை ஊழியர்கள் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டுமென்றும் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

➤ கடைகளுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட வேண்டுமென்றும் கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் பொருட்களை தொடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ அப்படி வாடிக்கையாளர் ஒரு பொருளை தொட்டுவிட்டால் கட்டாயம் அதனை வாங்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.