சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 5-ம் தேதியும் 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்றும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்டில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து 50% ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதால் 2-வது டெஸ்டுக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர் தெரிவித்துள்ளார்.