Penbugs
Coronavirus

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த‌ இரு வாராங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரனோ தொற்று‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு வழிமுறைகள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை.

மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.