தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 (8,56,917) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
- தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,56,917 ஆக அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 532 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,40,180 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது.
- அரசு மருத்துவமனையில் 03; தனியார் மருத்துவமனையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சென்னையில் இன்று ஒரே நாளில் 275 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,37,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை 1,80,20,932 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,082 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தற்போது 4,207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,17,730 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 407 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,39,152 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 264 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.