சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.
15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 964 பேர் பலியான நிலையில், 38 ஆயிரத்து 947 பேர் குணமாகியுள்ளனர்.
இதுதவிர 22 ஆயிரத்து 686 பேர் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2, 680 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதற்கடுத்து அண்ணாநகரில் 2,317 பேரும், ராயபுரத்தில் 2,239 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னையில் கொரோனா பாதித்தோரில் 58 புள்ளி 83 சதவீதம் பேர் ஆண்கள், 41 புள்ளி 17 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 30 முதல் 39 வயது வரையுடைய நபர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 40 முதல் 49 வயது வரை உடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.