முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஐபி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை தலைமை பெண் காவலருக்கு இரண்டாம் கட்டபரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவர், முதல்வர் வீட்டில் பணியில் தற்போது ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.