சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி அறிவிப்பின்படி இனி
- சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
- பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்
- கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
- சென்னையில் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம்
- வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.
- இரண்டு முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.
என்றும் பொதுமக்களும் , கடை வியாபாரிகளும் சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.