சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை .
தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சென்னையில் 60 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 171- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,48,182- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
சென்னையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 307- ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2,775- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லை என்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.