Penbugs
Coronavirus

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாகவுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் சென்னை அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. மே 1ஆம் தேதி மட்டும் சென்னையில் 176 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316. கடந்த ஒரு வார இடைவெளியில் நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னையில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 644. பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 2ஆயிரத்து 766 ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் கோயம்பேடு சந்தையில் வியாபாரியாக இருந்தவர். மற்றவர் தாம்பரத்தைச் சேர்ந்த்வர் ஆவார். 66மற்றும் 77
வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுக்கு ஏற்கெனவே சிறுநீரக பிரச்னை இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சூளைமேட்டைச் சேர்ந்த 80 வது மூதாட்டி கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

Image Courtesy: Akhila Eswaran.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs