புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை, மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையில் தொடர்ந்து
செயல்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த
வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து
பரிசீலிக்கப்படும் என துணை
நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.