கடந்த வாரம் கொரோனாவின் தாக்கத்தால் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது …!
இந்நிலையில் நேற்று இறந்த ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய மறுபடியும் எதிர்ப்புகள் தொடர்ந்ததால் காவல்துறை கொண்டு எதிர்த்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது …!
பல்வேறு விவாதங்களை கிளப்பி வரும் நிலையில்
“கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார்”
என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் …!