கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஸ்டேஸ் இரண்டில் தமிழகம் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் இருக்க எடப்பாடியார் தலைமையில் தமிழக அரசு இயந்திரமே முடக்கி விடப்பட்டுள்ளது .
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவு என்று இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது .
தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .
தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு…!
மக்கள் தனிமைபடுத்தலை மிக தீவிரமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் , அரசிற்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு செயலாளர் , மற்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளனர்.