Penbugs
Coronavirus

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கான பொது வார்டு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என்றும், ஐசியுவில் ஒரு நாள் சிகிச்சை பெற 10 ஆயிரம் ரூபாய் என்றும் தமிழக அரசால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமைனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவார்டில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை இத்திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள், மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

இந்த அறிவிப்பு ஏற்கனவே முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy