கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்களை 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 413 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 146 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.
அவர்களை ஆட்சியர், மருத்துவ குழுவினர் கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்ததின் அடிப்படையில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 364 பேர் கண்காணிப்புகு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 231 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.