தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படம் வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்
நிறைவான மகிழ்வில் ’மாநாடு’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்பு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் உங்கள் ஆதரவோடு வருகிறோம், வெல்வோம்’ என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.