தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரவு என்பது புதிது அல்ல பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் காலூன்றி பெரிய அளவிலும் வந்துள்ளனர் , ஒன்றும் இல்லாமல் காணாமல் போயும் உள்ளனர் .
சீயான் விக்ரம் தனது மகனான துருவை இன்று ஆதித்யா வர்மா படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்கிறார்..!
முதல் பட வெற்றியை பெறுவது என்பது எவ்வளவு முக்கியம் என்பது சீயானை தவிர வேறு யாராலும் உணரந்து இருக்க முடியாது அந்த வலிகள் எல்லாம் தன் மகனுக்கு இல்லாமல் இருக்க தன்னால் இயன்றவரை பார்த்து பார்த்து செய்துகொண்டிருக்கிறார் சூட்டிங் முதல் நாளில் இருந்து தற்போது பட பிரமோசன் வரை தனது மகனை அவர் லாஞ்ச் செய்யும் விதம் அவரின் பொறுப்பினை காட்டுகிறது ..!
பாலாவால் எடுக்கப்பட்டு அதில் தாயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் மொத்த படமும் வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை முடித்து இன்று வெளியிடுகின்றனர் இத்தனை பிரச்சினைகளை சந்தித்து இந்த படத்தின் மூலம் துருவ் தமிழ்சினிமாவிற்கு லாஞ்ச் ஆக வேண்டுமா என்று யோசித்தால் விக்ரமின் வாழ்க்கையை மாற்றி போட்ட படமான சேதுவும் ஆதித்யா வர்மாவின் கதைக்களமும் கிட்டதட்ட ஒன்று …!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விக்ரமிற்கு ஹேட்டர்ஸ் என்பது குறைவு அதே மாதிரி அவர் மகனுக்கும் அமைந்து தமிழ் சினிமாவில் ஒரு வலம் வர வாழ்த்துக்கள் …!