Penbugs
Cinema

துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் படத்தை தயாரிக்கும் பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே தயாரிப்பிலும் வெற்றி கண்ட பா.ரஞ்சித் அடுத்ததாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தை தயாரித்தார்.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Comment