பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுகவின் தலைவருமான திரு முக ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலையையும் மற்றும் அவரின் குடும்பத்தினரின் உடல் நிலையையும் கேட்டு அறிந்து கொண்டார் .
ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் …!
மத்திய அரசு ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய அரசுக்கு ஆக்கப்பூர்வ ஆலோசனையை திமுக தரும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளிவருகின்றன .
மேலும் ஸ்டாலின் அவர்களும் மோடி அவர்களின் உடல்நிலையை கேட்டறிந்தார் ..!