ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தியும் டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் தான் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தந்தை, அவருக்கு சல்யூட் அடித்தார்.
இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.