Penbugs
Politics

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக யாரை அமர்த்துவது என்பது குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Comment