குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “ குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
எங்களின் திட்டத்திலிருந்து கசிந்த தகவலை தெரிந்துக்கொண்டு திமுக உரிமைத்தொகை அறிவித்துள்ளது”என்று எடப்பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும். வரும் 12-ம் தேதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.