இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியாவின் எச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை, சீனாவின் மத்திய வங்கி வாங்கியது.
சீனாவின் இந்நடவடிக்கைகளை அடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டுமெனில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டால், சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடித்துள்ளது.