இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்தித்தார்.
அவர் கூறியதாவது இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை.
சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்ததுள்ளது.
இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றார்.
கொரோனா தடுப்பு பணிகளில், இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரமாக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.