பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார்.
பிரதமரின் உரை நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள் , மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து தமது உரையில் மோடி குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய 5வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்தும் பிரதமர் விளக்குவார் என்று கூறப்படுகிறது.