தமிழகத்தில் இன்று புதிதாக 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் :
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,446 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,96,226ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,290 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,764-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,834 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,63,258-ஆக உள்ளது.
மாநிலத்தில் இன்று 81,467 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.