தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று1,296 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7.75 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,97,693 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 228 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-161) மூலமாக, நேற்று மட்டும் 72,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 037 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று குணமடைந்து , வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 ஆக உள்ளது.
நேற்று மட்டும் கொரோனா பாதித்த 13 பேர் உயிரிழந்தனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,883 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மொத்தம் 10,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.