பாலிவுட்டில் நல்ல பட வாய்ப்புகளை என்றுமே தான் மறுத்ததில்லை என்றும் ஆனால் வேண்டுமென்றே ஒரு கும்பல் வதந்திகளைப் பரப்பி வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்தார்.
இதுகுறித்து பாலிவுட்டின் முன்னணி நடிகரும் மூத்த நடிகருமான சேகர் கபூர்.
‘உங்களுக்கு என்ன பிரச்னை தெரியுமா ஏ.ஆர்.ரஹ்மான். நீங்கள் ஆஸ்கர் விருது வென்றுவிட்டீர்கள். பாலிவுட்டில் கையாள முடியாத அளவு திறமை உங்களிடம் இருக்கிறது’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்,
“இழந்த பணம், புகழ் ஆகியவற்றை மீட்டுவிடலாம். ஆனால், நேரத்தை இழந்தால் மீட்க முடியாது. அமைதியாகக் கடந்துபோவோம். நாம் செய்ய வேண்டிய சிறந்த செயல்கள் நிறைய இருக்கின்றன’’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இதனையடுத்து ஏ.ஆர் ரகுமானின் டிவிட் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றது.