குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மேட்டூர் அணை திறப்பால் நடப்பு ஆண்டில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் – முதலமைச்சர்…!
மேலும் முதலமைச்சர் கூறியதாவது ;
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.
குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்.
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது
கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது
நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.