ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு 2021 – 2022 கல்வியாண்டுக்கான பாட தொடக்கம் நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்டுகிறது.
இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.