கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைகள் பசியால் இறந்து கொண்டிருக்கும்போது, கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இங்கு ஏழைகள் உணவு கிடைக்காமல் பசியால் இறந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், பணக்காரர்கள் கை கழுவும் சானிடைசருக்கு அரிசியைப் பயன்படுத்துவதில் அரசு மும்முராக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.