பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு – முதலமைச்சர் உத்தரவு..!
கல்லூரிகளில் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவு
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் மாணாக்கர்களுக்கு பருவத் தேர்வில் இருந்து விலக்கு
முதல் மற்றும் 2ஆம் ஆண்டு, பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு
முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு
இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு
முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு
எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு
பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு விலக்கு தொடர்பான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும்..