கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கோயம்பேடு சந்தை வாயிலாக காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.