வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தைக்காக நடித்தவர் திரு.தவசி .
கருப்பன் குசும்புக்காரன் எனும் வசனத்தின்மூலம் மிகவும் பிரபலமானார்.
தற்போது நடிகர் திரு. தவசி அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மைநிலையில் அவதிப்படுகிறார்.
எனவே அவருடன் நடித்த கதாநாயகர்கள் மற்றும் நடிகர் சங்கம் அவருக்கு உதவ முன் வரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் போடப்பட்டு வருகின்றது.
இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிடா மீசையில் பல கிராமிய படங்களில் நடித்து வந்த தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.