தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையில் கவனிக்கப்பட கூடியவராக இருப்பவர் கதிர் …!
இந்த வயதில் அவரின் கதை தேர்வுகள் சினிமா குறித்தான அவரின் பார்வையையும், அதில் அவரின் பக்குவப்பட்ட நடிப்பினை தரும்போது தமிழ் சினிமாவின் ஒரு நல்ல நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன..!
மதயானை கூட்டம் , கிருமி , சிகை , விக்ரம் வேதா , பரியேறும் பெருமாள் என ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களங்கள்..!
சிகை படத்திற்காக தன் உருவத்தையே பெண்ணாக மாற்றி அத்தனை மெனக்கெடலுடன் நடித்தி இருந்தது உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று ஆனால் அந்த படம் திரையரங்குகளில் கூட வெளிவராமல் போனது மிகுந்த அதிர்ச்சிகரமான ஒன்று .
பரியேறும் பெருமாளில் பரியாக வாழ்ந்து அதுவும் இறுதிக் காட்சியில் அவரின் வசன உச்சரிப்பும் முக பாவனைகளும் அந்த வலியை எளிதாக ரசிகர்களுக்கு கடத்தி சென்றது ஆயிரம் தேசிய விருதுகளுக்கு சமம்…!
தற்போது பிகில் படத்தை முடித்து இருக்கும் கதிருக்கு மேலும் பெரிய பட வாய்ப்புகள் வர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிய பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறோம்….!