Penbugs
CoronavirusEditorial News

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் என்பது குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிகளவில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

உள்ளே வரக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடையில் விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி அதிக கூட்டம் கூடியதையடுத்து தற்போது அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

குறிப்பாக நேற்று அதிகளவில் வாடிக்கையாளர் குவிந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

இதனையடுத்து ஊழியர்களை வெளியே வருமாறு கூறிவிட்டு கடைக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல விதிகளை மீறும் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment