சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலே எடை) விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இந்நிலையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ660-க்கு விற்கப்பட உள்ளது. டெல்லியில் 644 ரூபாயாக உள்ளது. கொல்கத்தாவில் 670 ரூபாயாகவும், மும்பையில் 644 ரூபாயாகவும் உள்ளது.