கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்ட மெரினா கடற்கரைக்கு எட்டு மாதங்களுக்கு பின் இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 30ந்தேதி வெளியிட்ட அறிக்கையில்,
‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, எட்டு மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.