Penbugs
Coronavirus

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் தீவிரமாகியுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்பொருட்டு சில தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு தளா்வுகள் பொருந்தாது என்று அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

ம.பி.யில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் – பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்

Penbugs

பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி மாநில அரசுகளை வலியுறுத்தல்

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

பிரதமர்மோடிக்கு எதிரான அப்ரிடியின் பேச்சு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி

Penbugs

பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி லடாக்கில் திடீர் ஆய்வு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs