Penbugs
Editorial News

மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

சென்னை ராயபுரத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எளிதாக அளிக்கும் நோக்கில் தமிழக அரசு மினி கிளனிக் திட்டத்தை கடந்த செப்டம்பரில் அறிவித்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த கிளினிக் தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 200 இடங்களில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment