பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சர்களுடனான காணொலிக் காட்சி கலந்தாலோசனையின்போது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க் அணிந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசித்தார்.
அக்கூட்டத்தின்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிறத்திலான வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தைக் குறிப்பிட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.