முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.
93 வயதான அவர் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார்.
அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் ராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சரின் தாயாரின் உடலுக்கு இன்று காலை 8.30 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.