நாடு முழுவதும் உள்ள நகராட்சி பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு, கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் தளர்வுகள் வழங்கப்படாது.
இந்தியாவில் இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 700க்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நிலையில் 50 சதவீத அளவில் சில்லறை விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.