ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக வேண்டிய நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அப்போது ஏற்படுத்தியது.
இந்நிலையில்
படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
”உங்கள் பொறுமைக்கு நன்றி. நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது வேற விளையாட்டு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்த இந்தப் படம் வெளியாவது, செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.