காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் கண்டிப்பாக பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினர் அலுவல் காரணமாக பயணம் செய்தாலும்,தனது சொந்த காரணமாக பயணம் செய்தாலும் காவல்துறையினர் என்று நடத்துனரிடம் கூறிவிட்டால் நடத்துனர் டிக்கெட் வாங்கமல் இருப்பதுதான் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பேருந்தில் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதனை சுற்றறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.